நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KWAP முதலீட்டு ஒப்புதல் தொழில்முறை நிபுணர் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது; அரசு தலையிடுவதில்லை: பிரதமர்

புத்ராஜெயா:

KWAP முதலீட்டு ஒப்புதல் முழுமையாக தொழில்முறை நிபுணர் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது.

இதில் அரசு தலையிடுவதில்லை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஓய்வூதிய நிதி நிறுவனம் (KWAP) எடுக்கும் முடிவுகள் உட்பட, எந்தவொரு விடயங்களிலும் முதலீடு தொடர்பான முடிவுகளிலும் அரசு ஒருபோதும் தலையிட்டதில்லை.

மாறாக, நியமிக்கப்பட்ட ஒரு தொழில்முறை முதலீட்டுக் குழுவால் அது தீர்மானிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட முகமையால் எடுக்கப்படும் ஒவ்வொரு முதலீட்டு முடிவும், அரசு மற்றும் தனியார் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலீட்டுக் குழுவின் விரிவான ஆய்வுக்குக் கூடுதலாக, ஒரு முறையான ஆய்வு திட்டத்தின் மூலம் கூர்ந்து ஆராயப்படுகிறது.

இந்தக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட  நிபுணர்களைக் கொண்டுள்ளது.

பொதுவாக, முடிவு எடுக்கப்பட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது, மேலும் இதற்கு நிதியமைச்சின் ஒப்புதல் தேவையில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset