நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்

கோலாலம்பூர்:

ஃபோரஸ்ட் சிட்டியில் நெட்வொர்க் பள்ளி நடவடிக்கை தொடர்பாகச் சோதிக்கப்பட்ட மொத்தம் 256 வெளிநாட்டினர் சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தியதும், மீதமுள்ள 10 பேர் தொழில்முறை வருகை அனுமதிச் சீட்டுகளை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

அந்த 10 பேரில்  நான்கு பேர் அமெரிக்கர்கள், மூன்று ரஷ்யர்கள், இரண்டு ஆஸ்திரேலியர்கள், ஒரு இந்தியர் அடங்குவதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷபான் கூறினார்.

இந்த குடிநுழைவு சோதனையில் இரண்டு உள்ளூர் மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

பரிசோதிக்கப்பட்ட மொத்த வெளிநாட்டினரில், 179 பேர் ஆண்கள், 87 பேர் பெண்களும் அடங்குவர்.

சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டினர், சுற்றுலா, வணிகம் அல்லது வருகைகள் போன்ற நோக்கங்களுக்காக மலேசியாவில் தற்காலிகமாகத் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset