நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஜொகூர்பாரு:

இன்று இங்குள்ள இஸ்தானா புக்கிட் செரீனில் நடைபெறவிருந்த ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்விழா நாளை இதே நேரத்தில் நடைபெறும் என்று இன்று காலை ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், விழா ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

ஜொகூரின் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் முன்னிலையில், இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

மேலும், இந்த விழாவில் மந்திரி புசார் ஓன் ஹபீஸ் காசி, ஜொகூர் அரச மன்றத்தின் தலைவர் ரஹீம் ரம்லி மற்றும் மாநிலச் செயலாளர் முஹம்மது ரிதா அப்துல் காதிர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset