நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கடைசி நிமிட கோல்களால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது அர்ஜெண்டினா

நியூயார்க்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி, அர்ஜெண்டினா அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது. ​

கடைசி நிமிடங்களில் அர்ஜென்டினா வீரர்கள் காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என சமனில் முடிந்தது. ​

தொடர்ந்து நடந்த  பிற்பாதியில் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டனி கார்டன் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.


கோல் வாங்கி பின்தங்கியதால் ஆவேசமடைந்த அர்ஜெண்டினா வீரர்கள், இங்கிலாந்தின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர்.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், 85ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் தரம் வாய்ந்த ஒரு கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டம் சமனில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் (90+2') அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லவுடாரோ மார்டினெஸ் இங்கிலாந்து தற்காப்பு அரணை சிதறடித்து அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார்.

மார்டினெஸ் அடித்த இந்த மேஜிக் கோலால் அர்ஜெண்டினா 2-1 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி வீரர்கள் சோகத்தில் மூழ்க, அர்ஜெண்டினா ரசிகர்கள் மைதானத்தையே திருவிழாக் கோலமாக மாற்றினர்.​

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா 2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கிண்ணத்தை தக்கவைக்கும் முனைப்பில் காத்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset