செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
கோல பிலா:
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டியிடவுள்ளனர்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
கோல பிலாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.
நெகிரி செம்பிலானில் மொத்தம் 36 தொகுதிகளிலும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 5 இந்தியர்களும் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.
கெஅடிலான் சார்பில் மணிவண்ணன் ஜெராம் பாடாங்கிலும் ராஜசேகரன் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.
இதே போன்று ஜசெக சார்பில் அருள்குமார் நீலாயிலும் வீரப்பன் ரெபாவிலும் முகுந்தன் சிரம்பான் ஜெயாவிலும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
