செய்திகள் மலேசியா
போரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் பள்ளி குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்: ஓன் ஹபிஸ்
ஜொகூர்பாரு:
சர்ச்சை ஏற்படுத்தியுள்ள போரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் பள்ளி குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
ஜொகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை கூறினார்.
இஸ்ரேலியர்கள் இரண்டாம் நாட்டு கடப்பிதழை பயன்படுத்தி இந்த பள்ளி திட்டத்தில் பங்கேற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பான பொதுமக்களின் கவலைகளைத் தொடர்ந்து அப்பள்ளியின் செயல்பாடு குறித்து முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
மக்கள் எழுப்பிய கவலைகளை மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும் சட்டத்திற்கும், மாநிலம், நாட்டின் நலன்களுக்கும் முரணான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஜொகூர் ஒரு இடமாக இருக்காது.
சட்டம், இறையாண்மை, ஜொகூர், மலேசியாவின் நலன்களுக்கு முரணான சித்தாந்தத்தையோ அல்லது இயக்கத்தையோ இந்த மாநிலத்தைக் கொண்டுவருவதற்கான தளமாக எந்தவொரு கட்சியும் மாற்றுவதை ஜொகூர் அரசாங்கம் அனுமதிக்காது என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
