செய்திகள் மலேசியா
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
மலாக்கா:
ஏழு நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வரை நியமிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜசெக மலாக்கா மாநில அரசிலிருந்து விலகுகிறது.
தேசிய முன்னணி தலைமையிலான மாநில நிர்வாகத்தில், கட்சியைச் சேர்ந்த இரண்டு ஆட்சிக் குழு உறுப்பினர்கள், இரண்டு துணை செயற்குழு உறுப்பினர்கள், ஒரு துணை சபாநாயகர் ஆகியோர் தங்கள் பதவிகளிலிருந்து விலகுவார்கள் என்று மலாக்கா ஜசெக தலைவர் கூ போய் தியோங் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, நியமிக்கப்படக்கூடாது.
இதனால் இந்தத் திருத்தம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று அவர் கூறினார்.
தொழில் வல்லுநர்கள், நிபுணர்களின் சேவைகளை நாட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மறுக்கவில்லை.
ஆனால், சட்டசபையைக் கூட்டவும் வாக்களிக்கவும் அதிகாரம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் நியமிக்கப்படக்கூடாது என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
