நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸிக்குள் உறங்கும் அரக்கனை எழுப்பிவிடாதீர்கள்: ஹென்றி

அட்லாண்டா:

மெஸ்ஸிக்குள் உறங்கும் அரக்கனை எழுப்பிவிடாதீர்கள் என்று தெர்ரி ஹென்றி எச்சரித்துள்ளார்.

2026 உலகக் கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்றில், எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வியத்தகு முறையில் மீண்டு வர மெஸ்ஸி உத்வேகம் அளித்தார்.

இதை தொடர்ந்து, தனது முன்னாள் பார்சிலோனா அணி வீரரான லியோனல் மெஸ்ஸியை ஒரு சாதாரண மனிதர் அல்ல என்று அவர் வர்ணித்துள்ளார்.

எட்டு முறை பலோன் டி ஓர் விருது வென்ற மெஸ்ஸிக்கு, தனது அணிக்கு மிகவும் தேவைப்படும்போது பொறுப்பேற்றுச் செயல்படும் ஒரு அபாரமான திறன் இருப்பதாக அந்த பிரான்ஸ் ஜாம்பவான் கூறினார்.

முதலில், அவர் எப்படி அழுதார் என்பதையும், அந்த ஆட்டம் அவருக்கும் அணிக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பாருங்கள்.

அவர் சில பெனால்டிகளை, அதாவது எட்டில் நான்கைத் தவறவிட்டதால், அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதை அது எங்களுக்கு நினைவூட்டியது. 

பின்னர், அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்பதை மீண்டும் எங்களுக்கு நினைவூட்டினார் என்று ஹென்றி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset