செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றா? எகிப்தின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பரபரப்பு
கெய்ரோ:
உலகக் கிண்ண கால்பந்து போட்டி முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றா என எகிப்தின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உலகக் கிண்ண கால்பந்து போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
இதில் அர்ஜெண்டினாவும், எகிப்தும் விளையாடின. போட்டி முடிவில் 3-2 என அர்ஜெண்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.
இந்த நிலையில், உலகக் கிண்ண கால்பந்து போட்டி முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எகிப்து நாட்டின் முன்கள வீரரான முஸ்தபா ஜிகோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார்.
போட்டி தொடங்கிய 15ஆவது நிமிடத்தில் எகிப்தின் யாசர் இப்ராகிம் அணிக்கான முதல் கோலை போட்டார்.
2ஆவது கோலை ஜிகோ போட்டபோது, வீடியோ உதவிக்கான நடுவர் அதனை கோலாக ஏற்க மறுத்து விட்டார். எகிப்து அந்த முடிவை ஏற்றுக்கொண்டது.
எனினும், போராடி 67ஆவது நிமிடத்தில், முகமது சலா மற்றும் ஹைசிம் ஹசன் உதவியுடன் முஸ்தபா ஜிகோ மற்றொரு கோலை போட்டு, எகிப்து அணியை 2-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் 10 நிமிடங்களில் 3 கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணியினர் வெற்குற்றச்சாட்டாக இதனால், போட்டி முடிவுக்கான விசில் ஊதப்பட்டதும், ஜிகோ உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டார். போட்டியில் வெளிப்படைத்தன்மை இல்லை.
நடுவரால் அநீதி இழைக்கப்பட்டு விட்டது. தெளிவாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
மெஸ்ஸிக்குள் உறங்கும் அரக்கனை எழுப்பிவிடாதீர்கள்: ஹென்றி
July 8, 2026, 4:39 pm
பெல்ஜியம் அணியின் அமடொவ் ஒனானா எடுஞ்சிய உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கெடுக்கமாட்டார்
July 8, 2026, 9:42 am
உலகக் கிண்ணம்; கடைசி 10 நிமிடங்களில் 3 கோல்கள்: காலிறுதியில் அர்ஜெண்டினா
July 7, 2026, 4:57 pm
உலகக் கிண்ண போட்டி; சுற்று 16இல் அர்ஜெண்டினா - எகிப்து மோதல்
July 7, 2026, 9:47 am
