நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸாம் பாக்கி வழக்கில் விசாரணை முடியும் வரை அரச விசாரணை ஆணையம் காத்திருக்கிறது: அஸாலினா

புத்ராஜெயா:

எம்ஏசிசி முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கிக்குச் சொந்தமான பங்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், அந்த அமைப்புக்குள் ஒரு பெருநிறுவன மாஃபியா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தை அதிகாரிகளின் விசாரணை முடியும் வரை நிறுவ முடியாது.

பிரதமரின் சட்ட, நிறுவன சீர்திருத்தத் துறையின் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் இதனை கூறினார்.

முழுமையான, நம்பகமான உண்மைகளைப் பெறுவதற்காக, அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆராய தற்போது அதிகாரிகளின் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

எனவே விசாரணை செயல்முறையானது சட்டத்திற்கும் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கும் இணங்க, சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், விரிவாகவும் மேற்கொள்ளப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.

எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் உண்மைகள், நீதி, சட்டத்தின் ஆட்சி கோட்பாடுகளின் அடிப்படையில் அமைவதை உறுதி செய்வதற்காக, எந்தவொரு தொடர் நடவடிக்கையும் விசாரணையின் முடிவுகளின்படியே வழிநடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset