நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நண்பகல் வரை நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பு

கோலாலம்பூர்-

தீபகற்ப மலேசியாவின் சில மாநிலங்களிலும்  சரவாக் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய மழை பொழியும் என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது. 

கெடாவில் கோல மூடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு பகுதிகளிலும் பினாங்கு மாநில முழுவதும் இந்த வானிலை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேராக் மாநிலத்தில் கெரியான், லாருட் மாத்தாங், மஞ்சோங் மற்றும் பாகான் டத்தோ மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழியும் வேளையில் பகாங்கில் ரொம்பின் பகுதியில் கனமழை பொழியும் என்று தெரிவிக்கப்படது.

சரவாக் மாநிலத்திலும் சபா மாநிலத்திலும் சில உட்புற பகுதிகளில் இந்த வானிலை நண்பகல் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் அண்மைய வானிலை நிலவரங்கள் குறித்து பொதுமக்கள் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று மெட் மலேசியா தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset