நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’  இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

ஜகார்தா:

இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியான்டோ இதனை வழங்கினார்.

முன்னதாக மோடிக்கு அதிபர் மாளிகையான இஸ்தானா மெர்டேகாவில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, செய்தியாளர்கள் முன்னிலையில் இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் பிரபோவோ சுபியான்டோ வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “மிகுந்த அன்போடும் மரியாதையோடும் இந்தோனேசியாவின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது. இந்த கவுரவம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உரியது. அதிபர் பிரபோவோவுக்கும் இந்தோனேசிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset