செய்திகள் உலகம்
“நான் இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது”: இந்திரா நூயி
வாஷிங்டன்:
பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமெரிக்காவைத் தவிர இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் தம்மால் பெரு நிறுவனத்தின் சிஇஓ ஆகியிருக்க முடியாது என்று கூறினார்.
‘‘இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது. ஏனெனில் தகுதிக்கு முக்கியத்துவம் அளிப்பது அமெரிக்க நடைமுறையாக உள்ளது. இங்குள்ள வழிகாட்டிகள் நீங்கள் ஆணா, பெண்ணா, என்ன இனம், என்ன பாலினம் என்று பார்க்க மாட்டார்கள். சிறந்த மூளை உள்ளவர்கள் மட்டுமே உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்’’ என்று பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி கூறினார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி, கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸுடன் கலந்துரையாடிய போது இவ்வாறு கூறினார்.
மேலும், குடியேறியவர்களுக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்புகள் வேறு எங்கும் கிடைக்காதவை. உலகின் மிகச்சிறந்த நாடு அமெரிக்கா என்றும் அவர் புகழ்ந்துரைத்தார். இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்திரா நூயியின் இந்த கருத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
