நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

புது டெல்லி:

தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையான அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் சுமாா் 18,500 அடி உயரத்தில் உள்ள சிவபெருமானின் உறைவிடமாக கருதப்படும் கைலாஷ் மலையையும் அதையொட்டிய புனிதமான மானசரோவா் ஏரியையும்  தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கடந்த 2020-இல் கரோனா பரவலால் முதலில் நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் 5 ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

‘தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையாக பதிவு செய்தவா்களா, அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களும் பெறும் வரை யாத்திரையைத் தொடங்கக் கூடாது’ என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset