செய்திகள் இந்தியா
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
புது டெல்லி:
தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையான அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் சுமாா் 18,500 அடி உயரத்தில் உள்ள சிவபெருமானின் உறைவிடமாக கருதப்படும் கைலாஷ் மலையையும் அதையொட்டிய புனிதமான மானசரோவா் ஏரியையும் தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
கடந்த 2020-இல் கரோனா பரவலால் முதலில் நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் 5 ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
‘தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையாக பதிவு செய்தவா்களா, அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களும் பெறும் வரை யாத்திரையைத் தொடங்கக் கூடாது’ என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
June 25, 2026, 3:00 pm
பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் லாரியில் வீட்டுக்கு சென்ற ஐடி ஊழியர்கள்
June 25, 2026, 12:01 pm
