நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாதியர் பற்றாக்குறைப் பிரச்சினையைச் சமாளிக்க, உள்ளூர் ஆள்பலத்தை அதிகரிப்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்துகிறது

புத்ராஜெயா:
தாதியர் பற்றாக்குறைப் பிரச்சினையைச் சமாளிக்க, உள்ளூர் ஆள்பலத்தை அதிகரிப்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்துகிறது.

சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் ஹஸ்னோல் அஹ்மத் கூறினார்.

மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினையைச் சமாளிக்க வெளிநாட்டு தாதியர் வரவழைக்கும் திட்டம் ஒரு எளிதான தீர்வு அல்ல.

ஏனெனில் இந்த செயல்முறை சிக்கலானது. அதிக செலவுகளை உள்ளடக்கியது.

செலவுகளைப் பொறுத்தவரை, பணிப்பெண்களை வரவழைக்கும் முதலாளிகளைப் போலவே, முகவர்களுக்கான கட்டணங்கள் போன்ற பல்வேறு கட்டணங்களையும் அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும்.

இன்னும் இல்லாத அரசாங்கங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

அதன்பிறகு சமத்துவம் அல்லது தகுதிகளை அங்கீகரிப்பது போன்ற பிரச்சினைகள் உள்ளன.

இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர், இந்த அணுகுமுறை அண்மைக் காலத்தில் செயல்படுத்தப்படாது.

நாட்டின் சுகாதாரத்தின் போக்கை ஆராய்தல் என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் ஹஸ்னோல் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset