நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் சாடிக் மீதான தீர்ப்பை ஜூலை 13-ஆம் தேதிக்கு கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைத்தது

புத்ராஜெயா:

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான அரசுத் தரப்பின் இறுதி மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பை, கூட்டரசு  நீதிமன்றம் வரும் ஜூலை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில்,

நீதிபதி ருசிமா கசாலி மருத்துவ விடுப்பில் இருந்ததால் இன்று ஆஜராக முடியவில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபு பக்கர் ஜெய்ஸ் கூறினார்.

எனவே, இன்று தீர்ப்பை இப்போது வழங்குவது  பொருத்தமானதல்ல என்று அவர் மேலும் அபு பக்கர் கூறினார்.

முன்னதாக அர்மாடா நிதியைப் பயன்படுத்தி நம்பிக்கை மோசடி, சொத்து முறைகேடு, பணமோசடி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு செய்த இறுதி மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.

அவர் விடுவிக்கப்படுவரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு மத்தியில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset