நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வைரலாகும் மருத்துவமனைச் சூழல்: ராணி எலிசபெத் மருத்துவமனையின் வசதிகள் சேவைகள் மேம்படுத்தப்படும்

கோத்தா கினபாலு:

ராணி எலிசபெத் மருத்துவமனையின் வசதிகள் சேவைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

சபா மாநில சுகாதாரத் துறை இதனை உறுதியளித்துள்ளது.

நோயாளிகள், உறவினர்கள் பொதுமக்களின் வசதி எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, ராணி எலிசபெத் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சேவை வழங்குதலைத் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

இரவு நேரங்களில் மருத்துவமனையின் சூழல் குறித்த பிரச்சினைகளை எழுப்பிய சமூக ஊடகப் பதிவுகளுக்குக் கிடைத்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அவசர, விபத்து சிகிச்சைத் துறையில் காத்திருக்கும் நேரங்கள், வரவேற்புப் பகுதியில் பொதுமக்கள் ஓய்வெடுப்பது, சிற்றுண்டிச்சாலை செயல்பாடுகள், வாகன நிறுத்துமிட வசதிகள் ஆகியவை அடங்கும்.

இரவு நேரங்களில் வரவேற்புப் பகுதி, பொது நடைபாதைகள், காத்திருப்புப் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என அத்துறை கூறியது.

முன்னதாக ராணி எலிசபெத் மருத்துவமனையின் சூழல் குறித்த காணொளி பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலானது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset