செய்திகள் மலேசியா
பன்றி பிரச்சினையை எழுப்பிய பெர்சாமா பெர்லிங் வேட்பாளரை ரபிசி ரம்லி தற்காத்தார்
ஜொகூர்பாரு:
தனது பிரச்சாரத்தின் போது பன்றி வளர்ப்புப் பிரச்சினையை எழுப்பிய பெர்லிங் தொகுதி வேட்பாளர் பூ வெய் ஹானை பெர்சாமா தலைவர் ரபிசி ரம்லி ஆதரித்துப் பேசியுள்ளார்.
எந்தவொரு இனமும் தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்றை ஏற்றுக்கொள்ளவோ அல்லது கடைப்பிடிக்கவோ ஊக்குவிப்பது இந்தப் பிரச்சினையின் நோக்கம் அல்ல.
சிறுபான்மையினர் உட்பட எந்தவொரு சமூகக் குழுவையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்காகப் போராடுவது ஒரு பிரதிநிதியின் பொறுப்பு என்பதைப் பற்றி வெய் ஹான் மேலோட்டமாக மட்டுமே குறிப்பிட்டார்.
சீனர்கள் பன்றி இறைச்சி உண்பது என்ற பிரச்சினையைப் பற்றி அவர் பேசியதால், எங்கள் வேட்பாளரின் காலம் முடிந்துவிட்டது என்று பலர் எனக்குச் செய்திகளை அனுப்பினர்.
ஆனால் நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்.
அது சில சீன வாக்காளர்களின் இதயங்களுக்கு நெருக்கமான ஒரு பிரச்சினை அல்லவா?.
மேலும் மலேசியர்களைப் பன்றி இறைச்சி சாப்பிடச் சொல்லவில்லை. அதை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை.
நாம் மக்களின் பிரதிநிதிகளாக ஆகும்போது, நாம் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
