செய்திகள் மலேசியா
வாழ்வின் இறுதிப் பரிசு: உறுப்பு தானம் மூலம் ஐவரைக் காப்பாற்றிய மலேசியாவின் முதல் பெண் நில அளவையாளர்
சுங்கைபுலோ:
மலேசியாவின் முதல் பெண் நில அளவையாளர், மறைவுக்குப் பின் உறுப்பு தானம் மூலம் குறைந்தது ஐந்து பேரின் உயிர்களைக் காப்பாற்றி, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளார். அவரது இந்த இறுதிப் பெருந்தன்மைச் செயல், மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாகப் போற்றப்படுகிறது.
சுங்கை பூலோ மருத்துவமனை, 72 வயதான ஹஜ்ஜா நார்மா அப்துல்லாஹ்வின் தன்னலமற்ற உறுப்பு, திசு தானத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு 'கௌரவ நடை' வழங்கி மரியாதை செலுத்தியுள்ளது.
“அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது விருப்பங்களை நிறைவேற்றிய அவரது அன்புக் குழந்தைகளால், பதிவுசெய்யப்பட்ட உறுப்பு தானம் செய்பவராக இருந்த அவரது உன்னதமான அர்ப்பணிப்பு இறுதியாக நிறைவேற்றப்பட்டது.
“இந்த வாழ்வின் பரிசு மூலம், அவர் தானம் செய்த உறுப்புகள் மற்றும் திசுக்கள் குறைந்தது ஐந்து நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று மருத்துவமனை கூறியது.
மேலும், இந்த உயிர்காக்கும் முயற்சியைச் சாத்தியமாக்குவதில் முக்கியப் பங்காற்றிய மலாயா பல்கலைக்கழகத்தின் கல்லீரல்-பித்தப்பை அறுவை சிகிச்சைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் மருத்துவமனை பெருமை கொள்கிறது என்றும், அவர்களின் நிபுணத்துவமும் அர்ப்பணிப்பும் இதற்கு உறுதுணையாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 11:52 am
சமுக உறவைகளை விளையாட்டு போட்டிகள் வலுப்படுத்துகின்றன: வின்சன்
June 23, 2026, 11:37 am
பாதுகாப்புப் படை சீருடையில் ஆயுதத்துடன் சுற்றிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் களமிறங்கும் போலிஸ்
June 23, 2026, 10:46 am
