நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கர்நாடக முதல்வருடனான சந்திப்பு; மலேசியாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்தும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பெங்களூரு:

கர்நாடக முதல்வருடனான சந்திப்பு மலேசியாவுக்கும் கர்நாடகாவுக்கும்  இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்தும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

பெங்களூருவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விதான சௌதாவில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்தது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கௌரவமாகும்.

டி.கே. சிவக்குமார் வழங்கிய சிறப்பான விருந்தோம்பலுக்கும், எங்களை அவர் அன்புடன் வரவேற்ற விதத்திற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் செல்வாக்கு பெற்ற ஒரு ராஜதந்திரியான அவர்,

ஜனநாயகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் அசைக்க முடியாத பாதுகாவலராக இருந்து வருகிறார்.

இந்த விழுமியங்களே அவரது தலைமைத்துவத்தின் சாராம்சத்தை வரையறுக்கின்றன.

இந்தப் பயணம், கர்நாடகாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவை ஆழப்படுத்துவதில் ஒரு அர்த்தமுள்ள படியாக அமையும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

மேலும் இந்த உறவு, பகிரப்பட்ட விழுமியங்கள், வளமான பொதுவான பாரம்பரியம், தலைமுறைகளைக் கடந்த நமது மக்களுக்கும் இடையேயான பிணைப்புகளின் அன்பான அரவணைப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset