நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய அரசுக்கும், ஜொகூர் அரசுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகத் தொடர்கின்றன: பிரதமர்

கோலாலம்பூர்:

மத்திய அரசுக்கும் ஜொகூர் இடைக்கால சுல்தான் துங்கு மகோட்டா இஸ்மாயிலும் நல்லுறவைத் தொடர்ந்து பேணுவதற்கு ஒப்புக்கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மத்திய அரசுக்கும் ஜொகூர் மாநில அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்படுத்தப்படும்.

கோலாலம்பூரில் இன்று துங்கு மக்கோத்தா இஸ்மாயிலை சந்திப்பதற்கான அமர்வும் நட்பான, இணக்கமான சூழலில் நடைபெற்றது.

பொருளாதார வளர்ச்சி, மாநில மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் மதானி அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றங்கள், நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

நட்பான, இணக்கமான சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பு, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், குறிப்பாக ஜொகூரில் உள்ள மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset