நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை கட்சியே முடிவு செய்யட்டும்: கைரி

கோலாலம்பூர்:

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யட்டும்.

ரெம்பாவ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலானில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு குறித்துக் கேட்டபோது, ​​அந்த விஷயம் கட்சியின் முடிவைப் பொறுத்தது.

இன்று இங்குள்ள ஸ்ரீ நெகாராவில், மலேசிய குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'பாதுகாப்பான குழந்தை, வலிமையான தேசம்' பிரச்சாரத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ​​

எனக்குத் தெரியாது, கட்சியிடம் கேளுங்கள் என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.

இருப்பினும், ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனது ஈடுபாடு குறித்துக் கேட்கப்பட்டபோது,  பிரச்சாரத்திற்கு உதவுவதற்காகக் களத்திற்குச் செல்வேன் என கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset