நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெப்பத்தின் காரணமாக பிரான்ஸில் மதுபானங்களுக்குத் தடை

பாரிஸ்:

ஐரோப்பாவைக் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெளியில் தலைகாட்ட முடியவில்லை. பலருக்கு வெப்ப பக்கவாதம் தாக்கியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்த வட்டாரத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பிரான்சில் 35 வட்டாரங்களில் உச்சக்கட்ட அனல்காற்று எச்சரிக்கைநிலை அறிவிக்கப்பட்டது.

சில பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டது.

அத்தகைய வட்டாரங்களில் பொது நிகழ்ச்சிகளில் மதுபானம் அருந்தத் தடை அறிவிக்கப்பட்டது.

ஜெர்மனியின் பெரும் பகுதிகளில் அனல்காற்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அங்கு வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை நெருங்குகிறது.

இத்தாலியில் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: AFP 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset