நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சென்ற வாரம் ஜூன் 13ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 119 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்கும்போது அது 39 சம்பவங்கள் அதிகம்.

சிங்கப்பூரில் வழக்கமாக டெங்கி அதிவேகமாய்ப் பரவும் காலம் மே முதல் அக்டோபர் வரை.

நேற்றைய நிலவரப்படி 12 இடங்களில் டெங்கிப் பரவல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றில் நான்கு இடங்களில் அது பெரிய அளவில் பரவுவதாகக் கூறப்படுகிறது.

கண்ட்ரிசைட் ரோட்டிலும் லெண்டோர் அவென்யூவிலும் ஆக அதிகமாக 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

விழிப்புடன் இருக்கும்படி அது பொதுமக்களிடம் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வீடுகளைச் சோதனையிடவும் தேவைப்பட்டால் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க அனுமதி அளிக்கும்படியும் அது கேட்டிருக்கிறது.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset