செய்திகள் உலகம்
தாய்லாந்து – வியட்நாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
பாங்காக்:
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்திலும் வியட்நாமின் மத்தியப் பகுதியிலும் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் பிராந்திய மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
தாய்லாந்து வானிலை ஆய்வுத் துறையின் நிலநடுக்கக் கண்காணிப்பு பிரிவு வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் அதிகாலை 3.43 மணியளவில் சியாங் ராய் மாகாணத்தின் மே சுவாய் மாவட்டத்தில் பதிவானது.
ரிக்டர் அளவுகோலில் 1.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, காலை 5.49 மணியளவில் வியட்நாமின் மத்தியப் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் உபோன் ராட்சத்தானி மாகாணத்திலுள்ள முவாங் மாவட்டத்திலிருந்து சுமார் 317 கிலோமீட்டர் தென்கிழக்கே வியட்நாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த இரு நிலநடுக்கங்களாலும் இதுவரை உயிர்சேதமோ, பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. நிலைமையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 2:51 pm
சீற்றம் காட்டிய செமெரு எரிமலை: 4.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்த கொதிநிலை மேகங்கள்
June 18, 2026, 11:18 am
இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் மகன் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு பின் கைது
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 1:02 pm
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
June 17, 2026, 11:48 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
June 17, 2026, 9:45 am
ஆசியான்–ரஷ்யா உச்சிமாநாடு: பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் மலேசியா
June 16, 2026, 5:26 pm
