செய்திகள் மலேசியா
நீலாய் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து, தேசியக் கூட்டணி கைப்பற்றும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
வரும் தேர்தலில் நீலாய் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து, தேசியக் கூட்டணி கைப்பற்றும்.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜொகூர் மாநில தேர்தலை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.
நெகிரி செம்பிலான் தேர்தலை எதிர்கொள்ள பெர்சத்து தயாராகி வருகிறது.
கட்சியின் தேர்தல் கேந்திரமும் தற்போது துரிதமாக செயல்பட்டு வருகிறது.
அதே வேளையில் பெர்சத்து சயாப் பிரிவு நெகிரி செம்பிலானில் பல தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
அந்த தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வதற்கு பெர்சத்து சயாப் பிரிவில் கடுமையாக உழைத்து வருகிறது.
இந்த தொகுதிகளில் நீலாய் சட்டமன்றத் தொகுதியும் அடங்கும்.
இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இங்குள்ள வாக்காளர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறேன்.
இதன் அடிப்படையில் நீலாய் சட்டமன்றத் தொகுதியை பெர்சத்து, தேசியக் கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
