நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்: டிரம்ப்

வாஷிங்டன்:

உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் முறைப்படி கையொப்பமிடுகின்றனா்.

இந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், லெபனான் மீதான ராணுவ நடவடிக்கைகளை கைவிடுவது, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை பின்வாங்குவது, ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

மேலும், ஈரானின் மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ. 3,000 கோடி அமெரிக்கா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா ஈரானுக்கு 300 மில்லியன் டாலர்களை வழங்குகிறது என்பது ஜனநாயகக் கட்சியினரால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset