செய்திகள் மலேசியா
ஜொகூருக்கு நம்பிக்கை கூட்டணி என்ன வழங்குகிறது; அவர்களின் மந்திரி புசார் வேட்பாளர் யார்?: ஓன் ஹபிஸ் கேள்வி
ஜொகூர்பாரு:
ஜொகூருக்கு நம்பிக்கை கூட்டணி என்ன வழங்குகிறது. அவர்களின் மந்திரி புசார் வேட்பாளர் யார் என்று ஜொகூர் தேசிய முன்னணி தலைவர் ஓன் ஹபிஸ் காஸி கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு புதிய யோசனைகள் இல்லை.
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெறுப்பு, இனவெறி உணர்வுகளை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுவரை நம்பிக்கை கூட்டணி தனது ஜொகூர் மந்திரி புசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
மாறாக, எதிர்க்கட்சியின் பிரச்சாரம், இந்த மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட, அரசியல் தாக்குதல்களில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
இதுவரை நான் கண்டது என்னவென்றால், அவர்கள் ஜொகூரை மேம்படுத்தக்கூடிய யோசனைகளையோ அல்லது கொள்கைகளையோ முன்வைப்பதை விட, அவதூறு பரப்புவதிலும், தவறான உண்மைகளைக் கொண்டு விளையாடுவதிலும், தவறான விஷயங்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
ஜொகூர் மக்கள் பகுத்தறியும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்கள்.
அவர்களால் உண்மைகளுக்கும் அவதூறுகளுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்கவும், இந்த மாநிலத்தின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம் யாரிடம் உள்ளது என்பதைத் தீர்மானிக்கவும் முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
