செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
புது டெல்லி:
டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு கடுமையான புழுதிப்புயல் வீசியது.
தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்றும் துவாரகா பகுதிகளில் நேற்று பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசியது.
நேற்று காலையிலும் டெல்லியில் லேசான மழை பெய்தது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மேற்கத்திய இடையூறு காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த அமைப்பின் தாக்கம் குறையத் தொடங்குவதால், தலைநகரில் செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக வெப்பநிலை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, டெல்லியின் பல இடங்களில் இடி, மின்னலுடன்லேசான மழை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. டெல்லியை ஒட்டியுள்ள ஃபதேஹாபாத், ஜிந்த், சோனிபட், ரோஹ்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதிப்புயலைத் தொடர்ந்து லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
