செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
புது டெல்லி:
டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு கடுமையான புழுதிப்புயல் வீசியது.
தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்றும் துவாரகா பகுதிகளில் நேற்று பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசியது.
நேற்று காலையிலும் டெல்லியில் லேசான மழை பெய்தது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மேற்கத்திய இடையூறு காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த அமைப்பின் தாக்கம் குறையத் தொடங்குவதால், தலைநகரில் செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக வெப்பநிலை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, டெல்லியின் பல இடங்களில் இடி, மின்னலுடன்லேசான மழை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. டெல்லியை ஒட்டியுள்ள ஃபதேஹாபாத், ஜிந்த், சோனிபட், ரோஹ்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதிப்புயலைத் தொடர்ந்து லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
‘வந்தே மாதரம் பாடலை எவரேனும் அவமதித்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை’ : மசோதா நிறைவேற்றம்
July 28, 2026, 12:26 pm
