நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியத் தலைநகரில் கடுமை​யான புழு​திப்​புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது

புது டெல்லி:

டெல்லியின் அனைத்​துப் பகு​தி​களுக்​கும் இந்​திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்' விடுத்​திருந்த நிலை​யில், அங்கு கடுமை​யான புழு​திப்​புயல் வீசி​யது.

தலைநகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்​றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும் என்​றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்​றும் துவாரகா பகு​தி​களில் நேற்று பிற்​பகல் 2:30 மணி நில​வரப்​படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசி​யது.

நேற்று காலை​யிலும் டெல்​லி​யில் லேசான மழை பெய்​தது. இமயமலைப் பகு​தி​யில் ஏற்​பட்​டுள்ள திடீர் மேற்​கத்​திய இடையூறு காரண​மாக இந்த மழைப் பொழிவு ஏற்​பட்​டுள்​ளது. 

May be an image of car, fog, street and road

எனினும், இந்த அமைப்​பின் தாக்​கம் குறை​யத் தொடங்​கு​வ​தால், தலைநகரில் செவ்​வாய்க்​கிழமை முதல் படிப்​படி​யாக வெப்​பநிலை உயரும் என்று நிபுணர்​கள் கூறுகின்​றனர்.

முன்​ன​தாக, டெல்​லி​யின் பல இடங்​களில் இடி, மின்னலுடன்லேசான மழை பெய்​யக்​கூடும் என ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்​கப்​பட்​டிருந்​தது. டெல்​லியை ஒட்​டி​யுள்ள ஃபதேஹா​பாத், ஜிந்த், சோனிபட், ரோஹ்தக் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் புழு​திப்​புயலைத் தொடர்ந்து லேசான மழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் கணித்​துள்​ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset