செய்திகள் இந்தியா
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
கௌஹாத்தி:
அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.
அங்குள்ள சிவசாகா், சராய்தேவ், கோலாகாட், ஜோா்ஹாட், நகான், சோனித்பூா், காம்ரூப் மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 3.32 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சராய்தேவ் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவசாகா் மாவட்டத்தில் உள்ள நஸ்ரியா வருவாய் வட்டத்தில், வெள்ளம் காரணமாக 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை தலா ரூ.9 லட்சமாக மாநில அரசு அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2026, 10:47 pm
‘வந்தே மாதரம் பாடலை எவரேனும் அவமதித்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை’ : மசோதா நிறைவேற்றம்
July 28, 2026, 12:26 pm
DATING.COM நிறுவனத்தின் புதிய முயற்சி: சீஃப் பிரேக்கப் ஆபீசர்' வேலைவாய்ப்பு
July 27, 2026, 3:30 pm
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத சினிமா பிரபலங்கள் கோழைகள்: இணையவாசிகள் கடும் கோபம்
July 26, 2026, 6:32 pm
நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை: இந்திய அரசை உலுக்கிய இளைஞர் படை
July 25, 2026, 10:50 am
