செய்திகள் இந்தியா
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
திருவனந்தபுரம்:
கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவின் பல மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
‘வந்தே மாதரம் பாடலை எவரேனும் அவமதித்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை’ : மசோதா நிறைவேற்றம்
July 28, 2026, 12:26 pm
DATING.COM நிறுவனத்தின் புதிய முயற்சி: சீஃப் பிரேக்கப் ஆபீசர்' வேலைவாய்ப்பு
July 27, 2026, 3:30 pm
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத சினிமா பிரபலங்கள் கோழைகள்: இணையவாசிகள் கடும் கோபம்
July 26, 2026, 6:32 pm
