நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: 

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவின் பல மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset