நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு

கண்ணூர்: 

கேரளத்தின் கண்ணூரிலிருந்து ஜெட்டாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் கண்ணூர் விமான நிலையத்திற்கே திரும்பியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கண்ணூர் விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆனால், சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, விமானத்தின் இயந்திரம் தொடர்பான எச்சரிக்கை விளக்கு எரிவதைக் கவனித்த விமானிகள், விமானத்தைத் திருப்ப முடிவு செய்தனர்.

விமானம் கண்ணூரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset