நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்

புது டெல்லி:

அமெரிக்கா நடத்​திய தாக்​குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​ததைக் கண்​டித்து டெல்​லி​யில் உள்ள ட்ரம்ப் போஸ்​டர்​களை ஆட்டோ ஓட்​டுநர்கள் கிழித்து ஏறிந்​தனர்.

அமெரிக்​கா​வின் 250-வது சுதந்​திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்​டது. இதையொட்​டி, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் ஒரு பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கி​னார். இதன்​படி, டெல்லி முழு​வதும் சுமார் 100 ஆட்டோ ரிக்​‌ஷாக்​களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்​கா' என்ற வாசகங்​கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில், கடந்த வாரம் ஓமன் வளை​கு​டா​வில் உள்ள ‘எம்டி செட்​டபெல்​லோ' என்ற எண்​ணெய் டேங்​கர் கப்​பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்​திய தாக்​குதலில், 3 இந்​திய மாலுமிகள் கொல்​லப்​பட்​டனர். இதைக் கண்​டிக்​கும் வகை​யில் டெல்லி ஆட்டோ ரிக்​‌ஷாக்​களில் இடம்​பெற்​றிருந்த போஸ்​டர்​களை ஓட்டுநர்​கள் கிழித்து எறிந்​தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset