செய்திகள் இந்தியா
அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
புது டெல்லி:
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன்படி, டெல்லி முழுவதும் சுமார் 100 ஆட்டோ ரிக்ஷாக்களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்கா' என்ற வாசகங்கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த வாரம் ஓமன் வளைகுடாவில் உள்ள ‘எம்டி செட்டபெல்லோ' என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் டெல்லி ஆட்டோ ரிக்ஷாக்களில் இடம்பெற்றிருந்த போஸ்டர்களை ஓட்டுநர்கள் கிழித்து எறிந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
