செய்திகள் மலேசியா
ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கு காவல்துறை தீவிரமான தயாரிப்பில் உள்ளது
கோலாலம்பூர்:
வரவிருக்கும் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த காவல்துறை கூடுதல் பணியாளர்களைக் களமிறக்கத் தயாராகி வருவதாக காவல்துறைத் தலைவர் (IGP) டான் ஸ்ரீ முஹம்மத் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்காக மட்டும் கூடுதலாக 4,000 முதல் 5,000 வரையிலான காவல்துறைப் பணியாளர்கள் தேவைப்படும் என அவர் கூறினார். மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்களிப்பு மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
ஜொகூர் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியும், வாக்குப்பதிவு ஜூலை 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 28ஆம் தேதியும், வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
