நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: தோல்வியிலிருந்து மீண்டு வந்தது கத்தார்

கலிபோர்னியா:

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இருந்து கத்தார் அணியினர் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

பி பிரிவில் இடம்பெற்றிருந்த கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 17ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பெரெல் எம்பலோ கோல் அடித்தார். 

இதையடுத்து கோல் அடிக்க கத்தார் முயற்சித்தது. அந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து முறியடித்தது.

90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலை வகித்தது. 

ஆட்டத்தில் 6 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 

அப்போது ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் கத்தார் வீரர் பவுலிம் கொஹ்கி கோல் அடித்தார். 

இதனால், 1 - 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. 

இதையடுத்து, இரு வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. 

பரபரப்பாக நடந்த கத்தார், சுவிட்சர்லாந்து ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

கத்தார் இதற்கு முன்னர் 2022இல் நடந்த உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.

அதிலிருந்து மீண்டு வந்துள்ள கத்தாருக்குப் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset