நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் பிரேசில் ஏமாற்றம்

நியூஜெர்சி:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சமநிலை கண்டு பிரேசில் அணியினர் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக் கிண்ண
தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசில், மொராக்கோ அணிகள் மோதின. 

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி கோல் அடித்தார். 

இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 32வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜுனியர் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா 1 கோலுடன் சமநிலை பெற்றது. 

இதனை தொடர்ந்து ஆட்டத்தின் பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. 

ஆட்டத்தின் 90 நிமிடங்களும் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. 

இறுதியில் பிரேசில் - மொராக்கோ ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset