செய்திகள் மலேசியா
ஒருதலைப்பட்சமான மதமாற்றச் சட்டத்தை எதிர்ப்பதில் இந்திரா காந்தி உட்பட மேலும் 13 பேர் தோல்வியுற்றனர்
கோலாலம்பூர்:
குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் பல்வேறு மாநில இஸ்லாமியச் சட்டங்களின் விதிகளை எதிர்த்து எம். இந்திரா காந்தி, மேலும் 13 நபர்கள் தாக்கல் செய்திருந்த மூல மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கைத் தொடர மனுதாரர் தகுதிநிலையை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று நீதிபதி அலிசா சுலைமான் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கைத் தொடர்வதற்கான
தகுதிநிலையின் அடிப்படைத் தேவையை மனுதாரர் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார் என்று நான் கண்டறிந்து தீர்ப்பளிக்கிறேன் என்று அலிசா கூறினார்.
மார்ச் 2023இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பெர்லிஸ், கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பேரா, ஜொகூர், கூட்டாட்சிப் பிரதேசம் ஆகியவை பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.
கூட்டரசு அரசியலமைப்பின் 12(4) மற்றும் 75-வது பிரிவுகளுக்கு முரணாக இருப்பதால், குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றுவதை அனுமதிக்கும் மாநிலத்தின் விதிமுறை செல்லாது என அறிவிக்கக் கோரி மனுதாரர் வழக்குத் தொடுத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 5:52 pm
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
June 12, 2026, 12:47 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
June 12, 2026, 12:45 pm
பாஸ் அல்லது பெர்சத்துவை வெளியேற்றுவது; கெரக்கான், எம்ஐபிபியின் கையில் உள்ளது: ஹாடி அவாங்
June 12, 2026, 10:13 am
