செய்திகள் மலேசியா
கவிஞர் சீனி நைனா முகம்மது ஆற்றிய தமிழ்த் தொண்டு அளப்பரியது: தொல்காப்பியத் திருக்கோட்டம் உருவாக்க நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ எம். சரவணன் புகழாரம்
கோலாலம்பூர்:
கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களுக்காக தொல்காப்பியத் திருக்கோட்டம் உருவாக்குவதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக தலைநகர் ம.இ.கா தலைமையகத்தில் ம இ கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தலைமை உரையாற்றிய டத்தோஸ்ரீ எம் சரவணன், "இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று தமிழுக்கு ஐயா அவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்த நாட்டில் நமது சேவையும், பங்களிப்பும் வரலாற்றில் பதிக்க வேண்டியது. அந்த வகையில் ஐயா போன்றவர்களுக்கு இது போன்ற கட்டடம் உருவாவது அவருக்கான பெருமை மட்டுமல்ல, தமிழுக்கான பெருமையும் கூட.

"இந்த நாட்டின் மிகச் சிறந்த தமிழ் அறிஞர் அவர். அவரது தமிழ் ஆற்றல் போற்றுதலுக்குரியது. எத்தனையோ பேருக்கு அவர் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் அவர் போதித்துள்ளார். நாங்கள் நடத்தும் கம்பன் விழாவாகட்டும், கண்ணதாசன் விழாவாகட்டும் அவர் இல்லாமல் நடைபெறாது.
"அவரது உரையை முதன்முதலில் நான் கேட்டதும் பார்த்ததும் டத்தின் ஸ்ரீ இந்திராணி அவர்கள் நடத்திய எழுத்தாளர் தின நிகழ்ச்சியில் தான். ஏதோ தமிழகத்தில் இருந்து பேச வந்த தமிழ் அறிஞர் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் நம் நாட்டு கவிஞர் என்று. அதன் பிறகு நான் அவரை விடவில்லை.

"இன்று நம் நாட்டின் தமிழ் வாழ்த்து, பொங்கல் வாழ்த்து அனைத்தையும் அவர் படைத்து தந்துள்ளார். ஒரு மனிதர் வாழ்ந்து சென்ற பிறகும் அவர் புகழ் நிலைக்க வேண்டும். அப்படிப்பட்ட சரித்திரம் படைத்த மனிதர் தான் இறையருட் கவிஞர் சீனி அவர்கள்.
"கடந்த ஆண்டு எனது பிறந்த நாளில் அவருக்கு ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளோடு என்னை வந்து பார்த்தார் டத்தோஸ்ரீ இக்பால். செய்துவிடுவோம் என்று நான் உறுதி கூறினேன்.

"இன்று டான்ஸ்ரீ ஹனிபா, டத்தோ அப்துல் ஹமீத், டத்தோ சகாதேவன், டான்ஸ்ரீ குமரன், டத்தோ ஜமருல் கான், டத்தோ வீரா ஷாகுல் ஹமீத், ராஜேந்திரன் போன்றோர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவாக தொல்காப்பியத் திருக்கோட்டம் எழுப்ப தோள் கொடுத்துள்ளார்கள்.
"இந்த நல்ல காரியத்திற்காக கிள்ளி கொடுக்காதீர்கள். அள்ளிக் கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் உரையாற்றினார்.



"அங்கு ஒரு தமிழ் ஆராய்ச்சி நிலையமும் இருக்கும். நூலகமும் இருக்கும். பலர் பள்ளியும் இருக்கும் என்று செயலவையின் சார்பில் தமிழ்மாறன் தனது துவக்க உரையில் குறிப்பிட்டார்.
பேங்க் நெகாராவின் அதிகாரியான அல் ஹாபிஸ் செய்யது ஜாபிர் செய்யது அலியின் பிரார்த்தனையோடு துவங்கிய நிகழ்ச்சியை கட்டடக்குழு ஆலோசகரும் இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவருமான டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தமிழ் குறிஞ்சித் திட்டு செயலாளர் பிரபு நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 9:14 pm
ஜோ லோவின் ஆடம்பர மாளிகையைப் பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவு
June 11, 2026, 5:53 pm
311 கிராம் கஞ்சா வழக்கு: மரண தண்டனையில் இருந்து தப்பிய திருநங்கைக்கு 5 ஆண்டு சிறை
June 11, 2026, 5:41 pm
