நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி அரசியல் கூட்டணி தனித்துப் போட்டியிடும்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

அனைத்து 36 மாநில சட்டமன்ற  இடங்களிலும் போட்டியிடப் போவதாக நம்பிக்கை கூட்டணி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தனித்துப் போட்டியிடுவதைத் தவிர தேசிய முன்னணிக்கு வேறு வழியில்லை.

ஆம் நெகிரி செம்பிலானில் நாங்கள் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம்.

கோலாலம்பூரில் நடைபெற்ற இன்வெஸ்ட் மலேசியா 2026 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset