நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

H1-B விசா கட்டண உயர்வு ரத்து: ட்ரம்ப்புக்கு பின்னடைவு

வாஷிங்டன்:

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.

அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக எச்​-1பி விசா வழங்​கப்​படு​கிறது. குறிப்​பாக, தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஐ.டி துறையில் திறமை​யான வெளி​நாட்டு ஊழியர்​களை பணி​யமர்த்த இந்த விசா பயன்​படு​கிறது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் அளித்த தீர்ப்பில், ‘அமெரிக்க பேரவையின் அனுமதியின்றி அதிபர் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இதை இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத தகவலின் படி எச்-1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை 85 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்.

கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்-1பி விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset