செய்திகள் உலகம்
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பாரிஸ்:
ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக குறைந்தது 30,000க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை நடுப்பகுதிக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 32,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு முக்கிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட ஆய்வுகளில், வெப்பம் காரணமாக நேரடியாக 33,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
யூரோமோமோ அமைப்பின் வாராந்திர அறிக்கையின்படி, ஜூன் மாதத்தின் கடைசி வாரம் மிகவும் மோசமானதாக இருந்தது.
அந்த வாரம் மட்டும் சுமார் 16,000 இறப்புகள் பதிவாகியுள்ளன; அதைத்தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் சுமார் 8,000 பேர் இறந்துள்ளனர்.
இந்த இரண்டு கால கட்டங்களிலும் ஐரோப்பாவில் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலை வீசியதுடன், பரவலான வறட்சியும் ஏற்பட்டு காடுகளில் காட்டுத்தீ பரவும் அபாயத்தை பலமடங்கு அதிகரித்தது.
ஐரோப்பாவை வாட்டி வதைத்து வரும் இந்த கடுமையான வெப்ப அலைக்கும் வறட்சிக்கும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
காஸாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்: 20 அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலி
August 19, 2026, 5:48 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்குச் சிறை, $45,000 அபராதம்
August 18, 2026, 4:01 pm
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா
August 18, 2026, 12:08 pm
