செய்திகள் உலகம்
இனப்படுகொலையில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட்: துருக்கி அதிரடி
அங்காரா:
காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
காசா எல்லை முற்றுகையை உடைத்து உதவிகளை வழங்க மே மாதத்தில்'குளோபல் சமுத் ஃப்ளோட்டிலா அமைப்பைச் சேர்ந்த 50 கப்பல்கள் துருக்கியிலிருந்து புறப்பட்டன. சர்வதேச கடல் எல்லையில் 430 தொண்டு ஊழியர்களுடன் பயணித்த இந்த உதவி கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து இடைமறித்தது.
அதில் இருந்த தொண்டு ஊழியர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியதுடன் பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

இச்சம்பவம் குறித்துத் துருக்கி நீதித் துறை அமைச்சர் அகின் குர்லெக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ஜூலை 14 அன்று பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்டின் அடிப்படையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலைச் சேர்ந்த அஃபெக் மொஸ்கோவிச் ஆகிய இருவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு துருக்கி நீதித் துறை முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சட்டவிரோதக் காவல், சித்திரவதை, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் கப்பல்களைக் கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
காஸாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்: 20 அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலி
August 19, 2026, 5:48 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்குச் சிறை, $45,000 அபராதம்
August 18, 2026, 4:01 pm
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா
August 18, 2026, 12:08 pm
