நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம் 

ஸ்டோக்ஹொம்: 

சுவீடன் நாட்டில் உள்ள ஃபாகெர்ஸ்டா நகரில் அமைந்துள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் வாளைக் கொண்டு பயங்கர தாக்குதல் ஒன்று அரங்கேறியுள்ளது. 

இந்த கோரத் தாக்குதலில் ஒரு நபர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்திற்குக் காரணமான 18 வயதுடைய நபர் ஒருவரை உள்ளூர் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

பள்ளியின் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த மூவரில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset