செய்திகள் உலகம்
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
ஸ்டோக்ஹொம்:
சுவீடன் நாட்டில் உள்ள ஃபாகெர்ஸ்டா நகரில் அமைந்துள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் வாளைக் கொண்டு பயங்கர தாக்குதல் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த கோரத் தாக்குதலில் ஒரு நபர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்திற்குக் காரணமான 18 வயதுடைய நபர் ஒருவரை உள்ளூர் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
பள்ளியின் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த மூவரில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
காஸாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்: 20 அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலி
August 19, 2026, 5:48 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்குச் சிறை, $45,000 அபராதம்
August 18, 2026, 4:01 pm
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா
August 18, 2026, 12:08 pm
