நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெகவுடன் ஒத்துழைக்க ஓன் ஹபிஸ் மறுப்பு; மோசமான வார்த்தைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும்: ஃபஹ்மி எச்சரிக்கை

கோலாலம்பூர்:

அரசியலில் மோசமான வார்த்தைகள் அதிகரிக்க அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

நம்பிக்கை கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குனர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதில் அரசியல் தலைவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஜசெகவுடன் ஒத்துழைக்க மறுக்கும் ஜொகூர் தேசிய முன்னணி நிலைப்பாடு குறித்து ஜொகூர் மந்திரி பெசார், டத்தோ ஓன் ஹபிஸ் காஸி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்கொலை சம்பவம் தொடர்பான பாதுகாப்பான ஊடக அறிக்கையிடல் குறித்த வட்டமேசை மாநாட்டு அமர்வுக்குப் பிறகு, இன்று இங்கு சுருக்கமாக அவர், மோசமான வார்த்தைகள் அதிகரிக்க அதிகரிக்க, நிலைமை இன்னும் மோசமாகிறது  என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset