நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதி​யம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்

போபால்: 

மத்​திய பிரதேச அரசு மருத்துவமனை​களில் பணியாற்றிய போலி மருத்துவர்கள் கைது செய்​யப்​பட்டு உள்ளனர்.

தமோ நகரில் செயல்​படும் சஞ்​சீவினி மருத்துவமனை​யில் போலி மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வரு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக மத்​திய பிரதேச சுகா​தா​ரத் துறை மற்​றும் காவல் துறை இணைந்து தமோ பகுதி சஞ்​சீவனி மருத்​து​வ​மனை​களில் திடீர் சோதனை நடத்​தினர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில் 10 மாவட்​டங்​களை சேர்ந்த சஞ்​சீவனி மருத்​து​வ​மனை​களில் 14 போலி மருத்​து​வர்​கள் பணி​யாற்​று​வது கண்​டறியப்​பட்டு உள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​களாக பணியாற்​றிய குமார் சச்​சின் யாதவ், ராஜ்​பால் கவுர், அஜய்மவுரியா ஆகியோர் போலி மருத்​து​வர்​கள் என்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அவர்​கள் 3 பேரும் கைது செய்​யப்பட் டனர்.

இதுகுறித்து சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கைதான போலி மருத்​து​வர்​கள் ரூ.10 லட்​சம் கொடுத்து போலி எம்பிபிஎஸ் சான்​றிதழை பெற்று உள்​ளனர். 3 போலி மருத்துவர்களும் சுமார் 2 ஆண்​டு​களுக்கு மேலாக அரசு மருத்துவர்​களாக பணி​யாற்றி நோயாளி​களுக்கு சிகிச்சை அளித்து உள்​ளனர்.

தேசிய சுகா​தார திட்​டத்​தின் கீழ் மத்​திய பிரதேச அரசு சார்​பில் மாநிலம் முழு​வதும் 783 சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் 2,000-க்​ கும் மேற்​பட்ட மருத்​து​வர்​கள் உள்ளனர். அவர்​களுக்கு மாதம் ரூ.80,000 ஊதி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தமோ பகு​தி​யைத் தொடர்ந்து மாநிலம் முழு​வதும் சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்றும் மருத்​து​வர்​கள் குறித்து ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. 

அவர்​களில் சிலர் பணி​யில் இருந்து திடீரென ராஜி​னாமா செய்துள்​ளனர். சிலர் பணிக்கு வரவில்​லை. 14 பேரும் தலைமறைவாகி விட்​டனர். அவர்​களை தேடும் பணி தீவிரப்படுத்தப்​பட்டு உள்​ளது. சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் மாநிலம் முழு​வதும் 80 மருத்​து​வர்​களின் எம்​பிபிஎஸ் சான்றிதழ்கள் தீவிர ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்டு உள்​ளன. இவ்வாறு மத்​திய பிரதேச சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் தெரிவித்​துள்​ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset