நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆகஸ்ட் 1 முதல் திருப்பதி கோயில் குளத்தில் நீராடத் தடை விதிப்பு

திருப்பதி: 

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வடக்கே அமைந்துள்ள சுவாமி புஷ்கரணி எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பக்தர்கள் நீராட திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம், அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளன. 

இதனையொட்டி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கோயில் குளத்தில் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தொடர்ந்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறும். 

எனவே, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பக்தர்கள் கோயில் குளத்தில் நீராட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset