நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை: இந்திய அரசை உலுக்கிய இளைஞர் படை 

புதுடெல்லி:

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் கரப்​பான் பூச்சி கட்சி சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்ட போராட்​டம் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னா​மா​வில் முடிந்​தது.

ஆம் ஆத்மி கட்​சி​யின் தொண்​ட​ராக பணி​யாற்றி அமெரிக்​கா​வில் முது​நிலை பட்​டப்​படிப்பு படிக்​கும் அபிஜித் திப்கே என்​பவர் கடந்த மே மாதம் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற பெயரில் இணையதளத்​தை​யும், சமூக வலை​தளப் பக்​கத்​தை​யும் தொடங்​கி​னார்.

இவர் நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்தை கையில் எடுத்​தார்.

இந்​தப் போராட்​டத்​துக்கு எதிர்க்​கட்​சி​யினரும், மாணவர்​களும் ஆதரவு அளித்​த​தால் இது மிகப் பெரிய போராட்​ட​மாக மாறியது. இதையடுத்து கரப்​பான் பூச்சி கட்​சி​யினருடன் அரசு பேச்​சு​வார்த்தை நடத்தி அவர்​களின் கோரிக்​கையை ஏற்​றுக் கொண்டது.

போராட்டத்தின் போது மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்தியாவெங்கும் ஆளும் மோடி அரசு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் மாணவ மாணவிகள் விதம் விதமாக பாடல்களை பாடி யும் கருத்துக்களை காணொளிகளாக இணையத்தில் பகிர்ந்தும்  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இறுதியில் இந்திய அரசு பணிந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset