செய்திகள் இந்தியா
அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் வழங்கிய சூப் குடித்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் முடித்தார்
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக சமூக சேவகர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமடையும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரை போலீஸார் கடந்த 18-ம் தேதி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவருக்கு அரசு சார்பில் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 26-வது நாளான நேற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வாங்சுக் சம்மதித்தார். அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்து சூப் வழங்கினர். அதை குடித்து தனது உண்ணாவிரதத்தை வாங்சுக் முடித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 10:50 am
ஆகஸ்ட் 1 முதல் திருப்பதி கோயில் குளத்தில் நீராடத் தடை விதிப்பு
July 22, 2026, 5:44 pm
