செய்திகள் இந்தியா
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத சினிமா பிரபலங்கள் கோழைகள்: இணையவாசிகள் கடும் கோபம்
புதுடெல்லி:
இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து மௌனம் காத்ததற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களைப் பலர் குறைகூறிவருகின்றனர்.
NEET மருத்துவத் தேர்வுத் தாள் கசிந்ததை அடுத்துத் தலைநகர் புதுடில்லியிலும் மற்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
ஆனால் அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்காமல் பிரபலங்கள் பலர் மௌனமாக இருந்தனர்.
அவர்களைப் பொதுமக்கள் பலர் "கோழைகள்" என்று கூறுகின்றனர்.

"அவர்கள் நடித்த படங்களை நாங்கள் தான் பார்த்தோம். எங்கள் ஆதரவின்றி அவர்களுக்குப் புகழும் செல்வமும் கிடைத்திருக்க மாட்டா. இப்போது எங்களுக்கு உதவி தேவைப்படும்போது அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்," என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் The Guardian ஊடகத்திடம் கூறினார்.
பிரகாஷ் ராஜ் மட்டுமே களத்திற்கு வந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு குரலை கொடுத்தார். நஸீருத்தீன் ஷா, நடிகை ரேவதி ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
வேறுவழியின்றி மோடியின் நண்பர்களான சல்மான் கான், அனுபம் கெர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் ஆர்ப்பாட்டங்கள் குறித்துச் சமூக ஊடகங்களில் பட்டும்படாமலும் பதிவிட்டனர்.
ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் பிழைகளைப் பற்றி நேரடியாகப் பேசாததால் அதற்கும் பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 6:32 pm
நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை: இந்திய அரசை உலுக்கிய இளைஞர் படை
July 25, 2026, 10:50 am
ஆகஸ்ட் 1 முதல் திருப்பதி கோயில் குளத்தில் நீராடத் தடை விதிப்பு
July 22, 2026, 5:44 pm
