செய்திகள் கலைகள்
பி.எஸ்.எஃப் வீரர்களைக் கவுரவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
அட்டாரி:
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் அட்டாரி எல்லையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘மைன் வாபஸ் ஆவுங்கா’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இது ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.
இப்பட வெளியீட்டை முன்னிட்டு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
‘ஜெய் ஹோ - ஏ ட்ரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் படையினர் காட்டும் துணிச்சல், தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கான நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இம்தியாஸ் அலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 8:22 pm
இசைப்பேரரசி எஸ்.ஜானகி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
July 12, 2026, 12:22 am
கானக் குயிலே காலமானாயா? - கவிதாஞ்சலி
July 11, 2026, 11:10 pm
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி காலமானார்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
